Breaking News
விமானி அபிநந்தனை திருப்பி ஒப்படைக்க இந்திய தூதரகம் பாகிஸ்தானிடம் வலியுறுத்தல்

காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய போர் விமானங்கள் விரட்டி சென்ற போது, ஒரு விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தது. இதனால் அதில் இருந்த சென்னையை சேர்ந்த விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் பிடிபட்டார். விமானம் விழுந்த பகுதியில் இருந்தவர்களால் சுற்றி வளைத்து பிடிக்கப்பட்ட அவரை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மீட்டனர்.

இதுபற்றி பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் கூறுகையில், இந்திய போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அதில் இருந்த விமானி தங்கள் காவலில் இருப்பதாகவும், ஜெனீவா மாநாட்டு ஒப்பந்தப்படி அவர் நடத்தப்படுவார் என்றும் கூறினார்.

இந்த நிலையில், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் அபிநந்தனை உடனடியாக மற்றும் பாதுகாப்புடன் திருப்பி ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி பாகிஸ்தான் வெளிவிவகார துறையிடம் வலியுறுத்தி உள்ளது.

இதேபோன்று புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் நாட்டின் தூதரக அதிகாரியிடமும் (பொறுப்பு) இந்தியா வலியுறுத்தி உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.