Breaking News
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தாக்குதல்; 2 தீவிரவாதிகள் பிடிபட்டனர் என தகவல்

ஜம்மு மற்றும் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து அங்கு நடந்த தேடுதல் வேட்டையில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 முதல் 3 தீவிரவாதிகள் பிடிபட்டு உள்ளனர் என தகவல் வெளியானது. அவர்களை பற்றிய அடையாளங்கள் உள்ளிட்ட விவரங்கள் வெளிவரவில்லை.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.