Breaking News
வாரணாசி தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார் பிரதமர் மோடி

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) மனு தாக்கல் செய்கிறார். இதையொட்டி நேற்று வாரணாசியில் பிரமாண்ட பேரணியை அவர் நடத்தினார்.

அங்கு உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக நிறுவனர் பண்டிட் மதன்மோகன் மால்வியா சிலைக்கு மாலை அணிவித்து மோடி பேரணியை தொடங்கினார். சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த பேரணியில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட பா.ஜனதா மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

வாரணாசி தொகுதியில் இன்று காலை 11.30 மணிக்கு பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இந்த நிகழ்ச்சியில் சிரோமனி அகாலிதளம் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ்சிங் பாதல், ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் கூட்டணி கட்சியினரும் கலந்துகொள்ள இருப்பதாக பா.ஜனதா தெரிவித்துள்ளது.

முன்னதாக காலை 9.30 மணிக்கு பா.ஜனதா வாக்குச்சாவடி அளவிலான தொண்டர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். 11 மணிக்கு காலபைரவர் கோவிலில் வழிபாடு நடத்துகிறார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.