Breaking News
மறைந்த அருண் ஜெட்லியின் குடும்பத்தினரை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்

சுவாசக்கோளாறு உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண் ஜேட்லி, சனிக்கிழமை அன்று உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடந்தன.

அவரது மறைவின் போது பிரதமர் மோடி, அரசு முறைப்பயணமாக வெளிநாட்டில் இருந்ததால், நேரில் அஞ்சலி செலுத்தவில்லை. டுவிட்டரில் இரங்கல் மட்டும் தெரிவித்து இருந்தார். அருண் ஜெட்லியின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி ஆறுதல் கூறியிருந்தார்.

இந்த நிலையில், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, அருண் ஜெட்லி இல்லத்துக்குச்சென்று, அருண் ஜெட்லியின் மனைவி, மகன், மகள் ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உடன் இருந்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.