
தூத்துக்குடியில் சிறுமியை ஏமாற்றி தாலிக்கட்டி பாலியல் வன்புணர்வு செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டணை- தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
தூத்துக்குடியில் சிறுமியை ஏமாற்றி தாலிக்கட்டி பாலியல் வன்புணர்வு செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், தூத்துக்குடி சக்திநகரை சேர்ந்த மணிகண்டன் (24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்த சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று தாலி கட்டிய மணிகண்டன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்த புகாரின்பேரில் அப்போதைய தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜ் விசாரணை நடத்தினார். மேலும் அப்போதய மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த வனிதா, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். இந்த வழக்கு தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மாதவ ராமானுஜம் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர்களாக எல்லம்மாள், மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் ஆஜராகினர்.