
5 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்தவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை- தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு 5 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் எட்டயபுரம் படர்ந்தபுளி பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் முருகன் (61) என்பவரை விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலெட்சுமி புலன் விசாரணை செய்து கடந்த 27.08.2022 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி சுவாமிநாதன் இன்று (23.04.2024) குற்றவாளியான முருகன் என்பவருக்கு 20 வருடங்கள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலெட்சுமி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துகுமாரியும், விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் தலைமை காவலர்கள் சமுத்திரகனி மற்றும் சங்கீதா ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்