தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சரக்கு வாகனத்தில் கடத்திய 3 பேர் கைது – ரூ 2,25,930/- மதிப்புள்ள 346 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல்

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சரக்கு வாகனத்தில் கடத்திய 3 பேர் கைது – ரூ 2,25,930/- மதிப்புள்ள 346 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸிலி தேவ் ஆனந்த் மற்றும் சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று (26.04.2024) கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலம்பட்டி மெயின் ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் கோவில்பட்டி கடலைகார தெருவை சேர்ந்தவர்களான பூவலிங்கம் மகன் பாண்டிமணி (30), ராமராஜ் மகன் ரகுபதி (29) மற்றும் கோவில்பட்டி மந்திதோப்பு ரோடு பகுதியைச் சேர்ந்த மாரிகண்ணன் ரஞ்சித் (33) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக சரக்கு வாகனத்தில் கடத்தி வந்தது தெரியவந்தது.

உடனே போலீசார் பாண்டிமணி, ரகுபதி மற்றும் ரஞ்சித் ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூபாய் 2,25,930/-  மதிப்புள்ள 346 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )