கை விரல்கள் ஒட்டி பிறந்த 5 வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து செயல்பட வைத்த தூத்துக்குடி அரசு மருத்துவமனை

கை விரல்கள் ஒட்டி பிறந்த 5 வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து செயல்பட வைத்த தூத்துக்குடி அரசு மருத்துவமனை

கை விரல்கள் ஒட்டி பிறந்த 5 வயது குழந்தைக்கு ஓட்டு உறுப்பு அறுவை சிகிச்சை செய்து செயல்பட வைத்துள்ள தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

கடந்த 07.07.2022‌ அன்று 5 வயதுமிக்க ஸ்ரீஜா என்ற குழந்தைகளுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சை (பிளாஸ்டிக் சர்ஜரி) செய்யப்பட்டது. இந்த குழந்தை பிறக்கும்போது வலது மூன்று மற்றும் நான்காம் விரல்கள் ஒட்டி இருந்தது. இதனால் விரலில் அசைவு குறைவாகவும் செயல்திறன் குறைவாகவும் மற்ற குழந்தை போல் சாப்பிட இயலாமலும், விளையாட எழுத முடியாமல் இருந்தது. இதற்கு ஒட்டுறுப்பு சிகிச்சை துறையை சேர்ந்த மருத்துவர்கள் டாக்டர். ராஜ்குமார், டாக்டர். அருணாதேவி, டாக்டர். பிரபாகர் மற்றும் டாக்டர். ராஜா ஆகியோர் அடங்கிய குழுவினரால் 07/07/2022 அன்று அறுவை சிகிச்சை செய்து விரல் பிரிக்கப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் தற்சமயம் பிரிந்த விரல்கள் நன்றாக செயல்படுவதாகவும், மேலும் மற்ற குழந்தைக்கும் இருப்பது போல் விரல் உள்ளதை கண்டு குழந்தை மற்றும் அக்குழந்தையின் பெற்றோர் மிகுந்த மகிழ்வுடன் உள்ளதாக தூத்துக்குடி அரசு மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படிக்கு ஒட்டுறுப்பு துறை டாக்டர்கள்,
டாக்டர் ராஜ்குமார் டாக்டர் அருணா தேவி டாக்டர் பிரபாகர் மற்றும் டாக்டர் ராஜா.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )