Breaking News
மொசூல் : பத்து நாளில் தப்பிய 26,000 பொதுமக்கள்

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக இராக்கில் உள்ள மொசூல் நகரை கைப்பற்றும் நோக்கில் நடைபெற்று வரும் போரில் இதுவரை 26 ஆயிரம் பொதுமக்கள் தப்பியோடியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக இராக்கில் உள்ள மொசூல் நகரை கைப்பற்றும் நோக்கில் நடைபெற்று வரும் போரில் இதுவரை 26 ஆயிரம் பொதுமக்கள் தப்பியோடியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மொசூல் நகரின் மேற்குப்பாதியில் உள்ள ஐ.எஸ் குழுவினரை விரட்டும் முயற்சியில் ராணுவம் தற்போது ஈடுபட்டுள்ளது.

அங்குதான் மோதல் காரணமாக சுமார் ஏழு லட்சத்திற்கும் அதிகமானோர் சிக்கிக்கொண்டுள்ளனர்.

சமீபத்திய முன்னேற்றங்களைத் தொடர்ந்து, மேற்கு புறநகர் பகுதிக்கு கொண்டு செல்லும் இறுதி பெரும் சாலையை கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக ராணுவம் கூறியுள்ளது.

கிழக்கு மொசூலின் சரி பாதியை ராணுவம் முன்னர் கைப்பற்றி கடந்த ஜனவரி மாதம் அப்பகுதியை முழுவதுமாக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.