தூத்துக்குடியில் வழிமறித்து தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த 2 ரவுடிகள் கைது.

தூத்துக்குடியில் வழிமறித்து தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த 2 ரவுடிகள் கைது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) பிரேம் ஆனந்த் தலைமையில் சார்பு ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் போலீசார் நேற்று (13.06.2024) ரோந்து பணியில் ஈடுபட்டபோது தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியில் சந்தேககத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, பந்தல்குடி பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் மல்லையாராஜி (எ) முத்து மல்லையாராஜி (38) மற்றும் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் மகன் மூர்த்தி (24) ஆகியோர் என்பதும் அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.

உடனே போலீசார் எதிரிகளான மல்லையாராஜி (எ) முத்து மல்லையாராஜி மற்றும் மூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )