Breaking News
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கு: டிடிவி தினகரனுக்கு டெல்லி போலீஸ் சம்மன்

அதிமுக துணைப்பொதுச் செயலாளர் டி. டி.வி. தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனுக்கு டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. இரட்டை இலை சின்னத்தைப் பெற ரூ.1.30 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளதை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் டி.டி.வி. தினகரனுக்கு சம்மன் அளிக்க டெல்லி போலீஸ் முடிவு செய்துள்ளது.

தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் நடத்திய சோதனையில் சுகேஷ் சந்திரா என்பவரிடம் இருந்து ரூ.1.3 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இரட்டை இலை சின்னம் பெற ரூ.60 கோடி பேரம் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுகேஷ் சந்திரா என்பவர் இடைத்தரகர் என மாஃபா பாண்டியராஜன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் லஞ்சம் கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மாஃபா பாண்டியராஜன் வலியுறுத்தியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.