காஷ்மீரில் வீடு வீடாக தீவிரவாதிகளை தேடும் பணி: நீண்ட இடைவெளிக்கு பின் தொடங்கியது
காஷ்மீரில் வீட்டுக்குள் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை வெளி யேற்றும் வகையில், சோபியான் மாவட்டத்தில் நேற்று மிகப்பெரிய அளவிலான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. இதில் ஹெலி காப்டர்கள், ட்ரோன்கள் (ஆளில்லா சிறிய விமானம்) உதவியுடன் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாது காப்பு படையினர் பங்கேற்றனர்.
வீடுகளில் பதுங்கியிருந்து பாது காப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கை நேற்று அதிகாலை தொடங்கியது. 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ராணுவம், சிஆர்பிஎப் மற்றும் போலீஸ் படையினர் இதில் ஈடுபட்டனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கை இதுவாகும். தீவிரவாதி களை வீடுவீடாக தேடும் பணி 1990-களில் நிறுத்தப்பட்டது. இது நேற்று மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கிராம மக்கள் அனைவரையும் பொதுவான இடத்தில் கூடச்செய்த பாதுகாப்பு படையினர், பின்னர் அவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.
“இப்பகுதியில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தீவிரவாதிகள் இருப்பதாக கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. என்றாலும் இதுவரை யாரும் சிக்கவில்லை” என்று ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.
பாதுகாப்பு படையினருக்கு உதவியாக ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. சிறு கல்வீச்சு சம்பவத்தை தவிர, இந்த நட வடிக்கை சுமூகமாக நடைபெற்ற தாக அந்த ராணுவ அதிகாரி கூறினார்.
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தீவிரவாதிகளின் அட்டூழியம் அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.