Breaking News
ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்கள்: ஸ்டாலின்

தவர்கள் கூட தமிழகத்தில் எப்போது ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற ஏக்கத்தில் உள்ளதாக தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இது தொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதம்: 6 ஆண்டுகளாக இருள் சூழ்ந்த தமிழகத்தில் சூரியக்கதிர்கள் நி ச்சயம் வெளிச்சத்தை பரப்பும். 5 ஆண்டு சோதனையின் தொடர்ச்சியாக ஒராண்டு கால சோதனையை மக்கள் அனுபவிக்கிறார்கள். மக்கள்படும் இன்னல் நீக்க மனசாட்சி இல்லாமல் இருக்கிறது அதிமுக ஆட்சி. அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள் கூட எப்போது ஆட்சி மாற்றம் வரும் என்ற ஏக்கத்தில் உள்ளனர். சோதனை மிகுந்த ஆட்சி ஜனநாயக முறைப்படி விரைவில் மாறும். மக்களுடன் இணைந்து திமுக எத்திசையிலும் வெல்லும். இவ்வாறு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.