Breaking News
பெண்கள் உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியிடம் இலங்கை தோல்வி

11–வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 24–ந் தேதி முதல் ஜூலை 23–ந் தேதி வரை நடக்கிறது.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், இந்தியா, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. இந்த போட்டிக்கான பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது. இதில் ஷெஸ்டர்பீல்டில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில் இலங்கை–இங்கிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, இங்கிலாந்து வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 47.2 ஓவர்களில் 155 ரன்னில் ஆல்–அவுட் ஆனது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 30.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.