Breaking News
ஜூலை 1 முதல் பான் எண் – ஆதார் எண் இணைப்பு கட்டாயமாகிறது

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு இன்று (ஜூன் 28) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜூலை 1 ம் தேதி முதல் புதிதாக பான் கார்டுக்கு விண்ணப்பம் செய்வோர் ஆதார் எண்ணை அவசியம் இணைக்க வேண்டும். இதற்காக வருமான வரி விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதார் எண் கட்டாயமாக்கப்படுவதற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்ததை அடுத்து, மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.