Breaking News
காதலிக்காக தணிக்கை குழுவை விமர்சித்த விக்னேஷ் சிவன்!

அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கம், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திகில் படமான ‘டோரா’ படத்தின் தணிக்கை சான்றிதழை பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியானது.

இப்படம் சமீபத்தில் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வருகிற மார்ச் 31ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்தில் திகில் காட்சிகள் அதிகம் இருப்பதாகக் கூறி படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

விவேக் சிவா மெர்வின் இசையமைத்துள்ள இப்படத்தில், தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் கார் ஒன்றுக்கு முக்கிய கதாப்பாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டோராவுக்கு ஏ சான்றிதழ் வழங்கிய சென்சார் போர்டை இயக்குனர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் விமர்சித்துள்ளார். தனது காதலியின் படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்த அதிருப்தியை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.