Breaking News
இங்கிலாந்து குண்டுவெடிப்பை கொண்டாடிய ஐ.எஸ்., ஆதரவாளர்கள்

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொண்டாடினர்.இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது குண்டுவெடித்தது. இதில் 19 பேர் பலியானார்கள். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனை பயங்கரவாத சம்பவமாக கருதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஹேஸ்டாக்குகளை உருவாக்கிய அவர்கள், இது போன்று தாக்குதல் சம்பவங்கள் நடக்க வேண்டும். ஈராக் மற்றும் சிரியாவில் நடந்த வான்வெளி தாக்குதலுக்கு அளிக்கப்பட்ட பதிலடி நடவடிக்கை என தெரிவித்துள்ளனர். மேற்கத்திய நாடுகளில் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.