Breaking News
100 ஆண்டுகள் பழமையான அரசு நிறுவனம் மூடப்படுகிறது

மத்திய அரசுக்கு, 100 ஆண்டுகளாக, பொருட்களை கொள்முதல் செய்ய உதவி வந்த, டி.ஜி.எஸ்., அண்ட் டி., என்ற அமைப்பு, இந்த மாதத்துடன் மூடப்படுகிறது.

இதுகுறித்து, மூத்த அரசு அதிகாரிகள் கூறியதாவது:பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், அரசுக்கு, பொருட்கள் கொள்முதல், வினியோகம் ஆகியவற்றை கவனிப்பதற்காக, டி.ஜி.எஸ்., அண்ட் டி., எனப்படும், சப்ளை, வினியோகங்கள் பொது இயக்ககம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், இணைய வழியில் பொருட்களை கொள்முதல் செய்து வினியோகிக்கும், ஜி.இ.எம்., எனப்படும், ‘இ – மார்க்கெட் பிளாட்பார்ம்’ கடந்தாண்டு, மத்திய வர்த்தகத் துறையால் துவக்கப்பட்டது. இதையடுத்து, டி.ஜி.எஸ்., அண்ட் டி., நிறுவனம், வரும், 31ம் தேதியுடன் மூடப்படுகிறது.டி.ஜி.எஸ்., அண்ட் டி., நிறுவனத்தின், 1,100 ஊழியர்கள், மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு மாற்றப்படுகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.