Breaking News
மருத்துவமனைக்குள் 6 பேர் கொலை: மாஜி ராணுவ அதிகாரியின் ரத்த வெறி

மனைவி மறுத்து பிரிந்து சென்றதால் ஆத்திரமடைந்த மாஜி ராணுவ அதிகாரி மருத்துவமனைக்குள் நுழைந்து 6 அப்பாவிகளை அடித்தே கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

அரியானா மாநிலம் பால்வால் பகுதியில் உள்ள மருத்துவமனைக்குள் நேற்று மதியம் 2.45 மணியளவில் 45 வயது மதிக்கத்தக்க மர்மநபர் திடீரென இரும்பு கம்பியுடன் நுழைந்தார். அங்கு கண்ணில் பட்டவர்களையொல்லாம் சரமாரியாக தாக்கினார். இதில் ஒரு கர்ப்பிணி பெண் உள்பட 6 பேர் தலையில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
அங்கு வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி.கேமிராவில் பதிவான காட்சியை வைத்து இரும்பு கம்பியுடன் அந்த மர்மநபர் அங்கும் மிங்குமாக அலைவது தெரிந்தது.
அதனை வைத்து போலீசார் விசாரித்ததில் கொலையாளி நரேஷ் தங்கார் ,45 என்பதும் ஒய்வு பெற்ற முன்னாள் ராணுவ லெப்டினன்ட் என்பதும் தெரியவந்தது. மனைவி சண்டைபோட்டு பிரிந்து சென்றதால் ஆத்திரத்தில் 6 இரும்பு கம்பியால் அடித்தே கொன்றதும் தெரியவந்தது. கொலையாளி தங்கார் தனது மாமனார் வீட்டிற்கு மனைவியை தேடி சென்ற போது அங்கு வைத்து போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.