Breaking News
சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை சி.பி.ஐ.-க்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணை ரத்து – சுப்ரீம் கோர்ட்

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கடந்த நவம்பர் 30-ந் தேதியுடன் ஓய்வு பெற்றார். அவரை மேலும் ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை ஐகோர்ட்டு பணி நீட்டிப்பு வழங்கியது.

இந்த பணி நீட்டிப்புக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் அசோக்பூஷண், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது . இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்தனர்.

சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை சி.பி.ஐ.-க்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர். சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் தொடரலாம் .

அவர் ஓய்வு பெற்று விட்டதால் சிலை கடத்தல் வழக்கு குற்றவாளிகளை கைது செய்ய பொன்.மாணிக்கவேலுக்கு அதிகாரமில்லை என உத்தரவிட்டு உள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.