Breaking News
இது வேலைக்கு ஆகாது… ராஜமவுலியை திருப்பி அனுப்பிய நடிகை

பாகுபலி என்னும் பிரம்மாண்ட படத்தை கொடுத்து இந்தியா முழுவதும் பிரபலமான இயக்குனர் ராஜமவுலி. இவர் பாகுபலி படத்தை தொடர்ந்து ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கிவருகிறார்.

இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், பாலிவுட் நடிகை அலியா பட் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். அதே போல், வெளிநாட்டு நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் என்பரும் ஒப்பந்தமானார்.

ஆனால், சில காரணங்களால் இவர் படத்தை விட்டு விலகினார். ராம்சரணுக்கு அடிப்பட்டிருப்பத்தால் படப்பிடிப்பு தற்சமயம் நிறுத்திவக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், விலகிய நடிகைக்கு பதில் வேரு ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்யும் முயற்சி நடைபெற்று வருகிறது.

அதன்படி, பிரபாஸுடன் சாஹோ படத்தில் நடித்து வரும் பாலிவுட் நடிகை ஷ்ரத்தாவை படக்குழு அனுகியுள்ளனர். ஏற்கனவே அவர் நிறைய படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இருப்பினும் கால்ஷீட் தேதியை அட்ஜெஸ்ட் செய்து நடிக்க முயன்றார்.

ஆனால், அது முடியாமல் போக படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்கவில்லையாம். ஷ்ரத்தாவுக்கு முன்னர் இந்த வாய்ப்பு எமி ஜாக்சனுக்கு செல்வதாக இருந்தது, ஆனால் அவர் கர்ப்பமாக இருப்பதால் இந்த வாய்ப்பை அவர் தவறவிட்டார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.