Breaking News
அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் இல்லை; தொண்டர்களே வாரிசு: முதல் அமைச்சர் பழனிசாமி பேச்சு

சேலத்தில் பூலாவரி என்ற இடத்தில் அ.தி.மு.க.வின் 47ம் ஆண்டு தொடக்க விழாவில் முதல் அமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்பொழுது, தி.மு.க.விலேயே வாரிசு அரசியல் என்பது உள்ளது. ஆனால் அ.தி.மு.க.வில் வாரிசு என யாரும் கிடையாது. தொண்டர்களாகிய நாம்தான் வாரிசு. தொண்டர்கள் இருக்கும் இயக்கமே வலிமையான இயக்கம். அ.தி.மு.க. இளைஞர்கள் இருக்கும் இயக்கம் என கூறினார்.
அதன்பின் அவர் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் என்னதான் விரட்டினாலும் ஒன்றும் நடக்க போவது இல்லை. தி.மு.க. ஆள் வைத்து உழைக்கிற கட்சி. அ.தி.மு.க. சொந்தமுடன் உழைக்கின்ற கட்சி.

தி.மு.க. தலைவராக கருணாநிதி இருந்தபொழுதே அ.தி.மு.க. ஆட்சியை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மக்களை ஏமாற்றும் கட்சிகள் இனி ஆட்சிக்கு வர முடியாது என்று அவர் பேசினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.