Breaking News
ஜம்மு காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து சுட்டனர்.

இதையடுத்து, பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில், 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சண்டையின் போது பயங்கராவதிகள் பதுங்கியிருந்த வீடும் சேதம் அடைந்தது.

இதற்கிடையே, பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதில், பொதுமக்களில் 4 பேர் காயம் அடைந்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.