Breaking News
மக்கள் நலனுக்காக செயல்படுவதில் திமுகவுக்கு முதலிடம்: மு.க.ஸ்டாலின்

மக்கள் நலனுக்காக செயல்படுவதில் சட்டப்பேரவையில் திமுகவுக்கு தான் முதலிடம் என்று மு.க.ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மக்கள் பணிகளை உணர்ந்து கடமையை திமுக நிறைவேற்றி உள்ளது என்றும் சட்டப்பேரவையில் எண்ணிக்கையிலும் முதலிடம் பெறும் காலம் விரைந்து வருகிறது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

குற்றவாளிகளுக்கு ஆராதனை
குற்றவாளிகளை ஆதாரனை செய்வதில் ஆளுங்கட்சியினர் ஆனந்தம் கொள்கின்றனர் என்றும் சட்டப்பேரவை மாண்புகளை அதிமுக மதிப்பதில்லை எனவும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். நடந்து முடிந்த பேரவை கூட்டத்தில் ஆளுங்கட்சியின் செயல்பாட்டுக்கு ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

கடனை அதிகரித்த அதிமுக அரசு
அதிமுக அரசின் நிவாக சீர்கேடுகளால் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் நேரடி கடன் சுமை ஏறியுள்ளது என்றும் தமிழக அரசின் கடன் தொகை தற்போது ரூ. 3.14 கோடி என்ற மோசமான நிலையில் உள்ளது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தமிழரின் தலையிலும் ரூ. 36 ஆயிரம் கடனை அதிமுக அரசு சுமத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டை பேரவையில் திமுக கூறியபோது ஆட்சியாளர்கள் பதில் தரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.