Breaking News

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 29-ம் தேதி கூடுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் காலை நடைபெறுகிறது. செயற்குழு உறுப்பினர்கள் 280 பேருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் 2770 பேருக்கும் அழைப்பு கடிதம் மாவட்ட செயலாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

அழைப்பு கடிதம் உறுப்பினர்களிடம் நேரில் வழங்க வலியுறுத்தப்பட்டு உள்ளது. பொதுச்செயலாளர் இல்லாத காரணத்தினால் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பில்லை. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் இந்த பொதுக்குழு கூடுகிறது. முன்னாள் முதல்-அமைச்சரும்,அதிமுக கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து,அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த செயற்குழு பொதுக்குழுவில் அதிமுக-வின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.