Breaking News
பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான ரகசிய அடிமை

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அன்னா ரஷ்டின் (28, ) சிறு வயது முதலே அனாதையாக திரிந்த இவர் வீடில்லாமல் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வந்துள்ளார்.

இவருக்கு 13 வயதாக இருந்தபோது ஆசியா நாட்டை சேர்ந்த டாக்சி டிரைவர் ஒருவர் அடைக்கலம் தருகிறேன் எனக் கூறி அவரை அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், வீட்டிற்குள் பூட்டி ஒவ்வொரு நாளும் பாலியல் பலாத்காரம் வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல், அவரை விபச்சார தொழிலில் ஈடுப்படுத்தி கொடுமைப்படுத்தி உள்ளார்.

சில வருடங்களுக்கு பிறகு அன்னாவிற்கு 4 குழந்தைகள் பிறந்து உள்ளது. ஆனால், இந்த 4 குழந்தைகளையும் அந்த டாக்ஸி ஓட்டுனர் பணத்திற்காக விற்பனை செய்துள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து 13 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் சித்ரவதைக்கு உள்ளான அப்பெண் சில மாதங்களுக்கு முன்னர் அங்கிருந்து தப்பி வெளியேறியுள்ளார்.

தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை ரகசிய அடிமை என்ற பெயரில் ஒரு புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.

இப்புத்தகத்தில் ‘இதுபோன்ற கொடுமைகளால் தற்போது சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்து நாட்டில் பல பகுதிகளில் இதுபோன்ற கொடுமைகள் நிகழ்ந்து வருவதால் அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இப்புத்தகத்தை வெளியிடுவதாகவும் அன்னா குறிப்பிட்டுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.