Breaking News
தெற்காசிய பெண்கள் கால்பந்து இறுதிப்போட்டியில் இந்திய அணி


தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சிலிகுரியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரை இறுதிப்போட்டியில் இந்திய அணி, நேபாளத்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி தரப்பில் கமலாதேவி 45-வது நிமிடத்திலும், இந்துமதி 58-வது நிமிடத்திலும், சஸ்மிதா மாலிக் 83-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். நேபாள அணி சார்பில் சபித்ரா பண்டாரி பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி பதில் கோல் திருப்பினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.