Breaking News
மொபைல் போனில் கேம் விளையாடிய தாயார் உயிர் இழந்த 4 வயது சிறுவன்

சீனாவில் 4 வயது சிறுவன் தனது தாய் கண்முன்னே நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சியாங்யங் நகரத்தில் உள்ள பிரபல ரிசார்ட்டிலே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. குறித்த வீடியோவில், நீச்சல் குளத்தில் நின்றுக்கொண்டு தாய் போனில் பயன்படுத்தி க்கொண்டிருக்க, 4 வயது மகன் அவருக்கு பின்னால் நீரில் தத்தளித்து உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்.

இதை சற்றும் கவனிக்காமல் அந்த பெண் போனை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

சற்று நேரம் கழித்து தனது மகன் காணவில்லை என்று அறிந்த அந்த பெண், ரிசார்ட் ஊழியர்கள் உதவியுடன் குழந்தையை தேடியுள்ளார்.

இந்நிலையில், 30 நிமிடங்களுக்கு பிறகு சிறுவன் குளத்தில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவனை சோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து விசாரணைக்காக ரிசார்ட் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

நன்றி் : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.