Breaking News
ஆபரே‌ஷன் தியேட்டரில் கரப்பான் பூச்சி அறுவை சிகிச்சையை நிறுத்திய டாக்டரால் பரபரப்பு

தானேயில் 500 படுக்கை வசதிகொண்ட சத்ரபதி சிவாஜி மாநகராட்சி ஆஸ்பத்திரி உள்ளது. தானே மற்றும் அதை சுற்றி உள்ள மக்கள் இங்கு தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்தன்று அந்த ஆஸ்பத்திரியின் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் சஞ்சய் பரன்வால் 45 வயது நபர் ஒருவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்ய இருந்தார். அவர் அறுவை சிகிச்சை செய்ய தயாராக இருந்தபோது, ஆபரே‌ஷன் தியேட்டருக்குள் கரப்பான் பூச்சி ஒன்று சுற்றியது. இதைப்பார்த்து அவர் தனது அறுவை சிகிச்சையை தொடங்காமல் நிறுத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் மிகுந்த பராமரிப்பு அவசியம் உள்ள ஆபரே‌ஷன் தியேட்டரில் கரப்பான் பூச்சி சுற்றித்திரியும் சம்பவம் நோயாளிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியை முறையாக பராமரிக்க மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.