Breaking News
எகிப்து நாட்டில் பயங்கரவாத தாக்குதலில் 8 போலீசார் சாவு

எகிப்து நாட்டில் அதிபராக இருந்து வந்த ஹோஸ்னி முபாரக், 2011-ம் ஆண்டு மக்கள் புரட்சியின் மூலம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து அந்த நாட்டில் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்துகின்றனர்.

இந்த நிலையில், எகிப்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள அல் நாக்ப் நகரில் உள்ள பாதுகாப்பு சோதனை சாவடி ஒன்றின்மீது நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

அவர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டபோது, அங்கு பணியில் இருந்த போலீசாரும் தங்கள் துப்பாக்கியால் பதிலடி தந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச்சண்டை நடந்தது. அதன் முடிவில் 8 போலீசார் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மற்ற பயங்கரவாதிகள் தப்பி ஓடி விட்டனர். அவர்களை தேடிப்பிடிக்கும் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.