Breaking News
தமிழகம் முழுவதும் திமுகவினர் ரயில் மறியல்… பல ஊர்களில் காலையிலேயே தொடங்கியது

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று திமுகவினர் ரயில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர். பல ஊர்களில் காலையிலேயே ரயிலை மறிக்கத் தொடங்கி விட்டனர் திமுகவினர்.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்காததைக் கண்டித்தும், தமிழக அரசின் செயலற்ற தன்மையைக் கண்டித்தும் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

இன்று முற்பகல் 11 மணி அளவில் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் பல ஊர்களில் காலையிலேயே ரயில் மறியல் தொடங்கி விட்டது. அலை அலையாக வந்த திமுகவினர் ரயில்களை மறித்துப் போராட்டம் நடத்தியதால் ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பைச் சந்தித்தது.

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் ஐ பெரியசாமி தலைமையில் அவரது மகன் செந்தில் குமார் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர்.

திருத்தணி அருகே திருவாலங்காடு ரயில் நிலையத்தில் கோவை எக்ஸ்பிரஸ், அரக்கோணம் பாசஞ்சர் உள்பட 5 ரயில்கள மறித்துப் போராட்டம் நடத்தப்பட்டது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.