Breaking News
அமெரிக்காவில் பீட்டாவின் தலைமையகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமெரிக்காவில் உள்ள பீட்டாவின் தலைமையகத்தை முற்றுகையிட்டு அமெரிக்க வாழ் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரியும், தடைக்குக் காரணமான பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும், தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. வெளிநாடுகளிலும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக அங்கு வசிக்கும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள பீட்டாவின் தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் வெர்ஜினியாவிலுள்ள பீட்டாவின் தலைமையகத்தின் முன்று குவிந்த அமெரிக்க வாழ் தமிழர்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி, பீட்டாவுக்கு எதிராக கறுப்பு கொடி காட்டி வருகின்றனர். அங்கு அமெரிக்காவின் 16 மாகாணங்களை சேர்ந்த தமிழர்கள் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர்.

நன்றி : தினமலர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.