Breaking News
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கடலில் மூழ்கி மாணவன் பலி

மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட 11-ம் வகுப்பு மாணவன் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

அம்பத்தூர் மேனாம்பேடுவை சேர்ந்த கல்யாணராமனின் மகன் மணிகண்டன்(16). அம்பத்தூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் இவர், 22-ம் தேதி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொள்ள நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு வந்தார்.

பின்னர் நண்பர்கள் கடல் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது மணிகண்டனை மட்டும் காணவில்லை. அவரை தேடிய நண் பர்கள், நீண்ட நேரம் ஆனதால் வீடு திரும்பி விட்டனர். மணிகண்டனை காணாமல் அவரது பெற்றோர் நண்பர்களிடம் விசாரித்தனர்.

இதையடுத்து, 23-ம் தேதி அண்ணா சதுக் கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க புறப்பட்டுள்ளனர். மெரினாவில் தடியடி நடத் தப்பட்டதால் அவர்களால் காவல் நிலையம் வரமுடியவில்லை. மறுநாள் 24-ம் தேதி புகார் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், கானாத்தூர் கடல் அருகே கரை ஒதுங்கிய ஒரு இளைஞனின் உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பார்த்த பெற்றோர், அது மணிகண்டனின் உடல்தான் என அடையாளம் கண்டு கதறி அழுதனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.