Breaking News
ஈஃபிள் டவரை தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க கண்ணாடி சுவர்

இந்த வருடத்தின் இறுதிக்குள், சாத்தியமான பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து பாரிஸில் உள்ள ஈஃபில் கோபுரத்தை பாதுகாக்க, அதனைச் சுற்றி வலிமையான கண்ணாடி சுவர் நிறுவப்படவுள்ளது.

இந்த வருடத்தின் இறுதிக்குள், சாத்தியமான பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து பாரிஸில் உள்ள ஈஃபி ல் கோபுரத்தை பாதுகாக்க, அதனைச் சுற்றி வலிமையான கண்ணாடி சுவர் நிறுவப்படவுள்ளது.

கடந்த யூரோ 2016 கால்பந்து போட்டி நடைபெற்றபோது நிறுவிய உலோக வேலிகளுக்கு பதிலாக இந்த இரண்டரை மீட்டர் சுவர் அமைக்கப்படும் என நகரின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நகரத்தின் மிக மதிப்பிற்குரிய இடங்கள் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளால் பாதுகாக்கப்பட வேண்டும் என சுற்றுலாத் துறையின் துணை மேயர் ஷான் ஃப்ரான்சுவா மார்த்தின் தெரிவித்துள்ளார்.

நன்றி : தி இந்து தமிழ்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.