Breaking News
‛கையை வெட்டுவேன்’: கலைராஜன் மீது வழக்கு

சென்னை, தேனாம்பேட்டை யில், பிப்., 9ம் தேதி அ.தி.மு.க., தென் சென்னை வடக்கு மாவட்ட செயலர், வி.பி.கலைராஜன் பேட்டி அளித்தபோது, ‘ அதிமுக மீது கை வைத்தால் அவருக்கு கை இருக்காது. அவரது உடம்பில் கை இருக்காது, என்றார். இந்தமிரட்டல் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கலைராஜன் மீது நடவடிக்கை கோரி, காஞ்சிபுரம் மத்திய மாவட்ட மாணவரணி இணை செயலரும், வழக்கறிஞருமான செல்லபாண்டியன், சென்னை கமிஷனர் அலுவலகத்தில், புகார் அளித்தார். கமிஷனர் ஜார்ஜ் உத்தரவை அடுத்து, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில், கலைராஜன் மீது, கொலை முயற்சி உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.