Breaking News
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

ஜம்மு காஷ்மீரில் ராஜோரி கெரி பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக, பாதுகாப்புப் படையினருக்கு, தகவல் கிடைத்தது. இதன்பேரில், அதன் சுற்றுப்பகுதிகளில் தீவிர தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அப்போது, அங்கே மறைவிடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சிலர், பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதற்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.

சில நிமிடங்கள் நீடித்த இந்த சண்டையில், பயங்கரவாதிகளில் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனுடன் இருந்த 2 பேர் தப்பியோடிவிட்டனர். தொடர்ந்து, அங்கே தேடுதல் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.