Breaking News
இன்று (24ம் தேதி) மாலை 5 மணிக்கு கட்சி குறித்த அறிவிப்பு :தீபா

இன்று (24 ம் தேதி) மாலை 5 மணிக்கு புதிய கட்சி துவங்குவது குறித்த அனைத்து விபரங்களும் வெளியிடப்படும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று (24 ம் தேதி) பேரவைக்கான புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தீபா: ஜெயலலிதா செய்த தியாகங்களை பின்பற்றி செயல்பட வேண்டும் எனவும் , புதிய பேரவை, கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும், பெயர், மற்றும் கொடி உள்ளிட்ட அனைத்தும் தயாராகி விட்டாதாகவும், அந்த விபரங்கள் அனைத்தும் இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இன்று ஆர்.கே., நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ள போவதில்லை எனவும் கூறினார்.

நன்றி : தினமலர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.