Breaking News
பிரணாப் முகர்ஜி இன்று சென்னை வருகை; போலீசார் குவிப்பு

தாம்பரம் விமானப்படை விழாவில் பங்கேற்க, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இன்று(மார்ச் 2) சென்னை வருகிறார். இதையொட்டி, 1,000 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை, தாம்பரத்தில் உள்ள, இந்திய விமானப்படை தளத்தில், சிறந்த வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி, நாளை காலை(மார்ச் 3) நடக்கிறது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார். அதற்காக அவர், இன்று இரவு, 8:05க்கு, கேரள மாநிலம், கொச்சியில் இருந்து, விமானப்படை விமானத்தில், சென்னை வருகிறார்.

நாளை…

பின், கிண்டி கவர்னர் மாளிகையில் தங்கும் அவர், நாளை(மார்ச் 3) காலை, 9:00 மணியில் இருந்து, 11:20 வரை, விமானப்படை வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின், மதியம், 12:00க்கு, அடையாறில், இந்திய பெண்கள் சங்க நுாற்றாண்டு விழாவில் பங்கேற்று விட்டு, பிற்பகல், 1:15க்கு, டில்லி புறப்பட்டு செல்கிறார்.

பலத்த பாதுகாப்பு:

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் வருகையை ஒட்டி, சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தெற்கு மண்டல இணை கமிஷனர் சங்கர் தலைமையில், இணை கமிஷனர் அன்பு மேற்பார்வையில், 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

தீவிர சோதனை:

ஜனாதிபதி, சென்னையில் செல்லும் வழித்தடங்கள், பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மூன்று நாட்களாக, வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்களும், அதிநவீன கருவிகளுடன் சோதனை நடத்தி உள்ளனர். உளவு போலீசாரும் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.