Breaking News
ராணுவத்தில் துன்புறுத்தப்படுவதாக பேட்டி கொடுத்த கேரள வீரர் ராய் மேத்யூ மர்ம மரணம்

கேரள மாநிலம் கொல்லம் மாவட் டத்தைச் சேர்ந்தவர் ராய் மேத்யூ. இவர் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள தியோலாலி ராணுவ கன்டோன்மென்டில் பணி யாற்றி வந்தார்.

அண்மையில் பத்திரிகை ஒன்றின் ரகசிய நடவடிக்கைக்கு பேட்டியளித்த மேத்யூ ,உயரதிகாரி களால் ராணுவ வீரர்கள் எப்படி துன்புறுத்தப்படுகின்றனர் என தனது முகத்தை மறைத்தபடி தெரி வித்துள்ளார். அப்போது இந்த வீடியோ வெளியாகாது என அந்த பத்திரிகையாளர் கொடுத்த வாக் குறுதியை அடுத்து, துணிச்சலுடன் ராணுவ முகாம்களில் நடக்கும் துன்புறுத்தல்கள் குறித்து அவர் விவரித்தார். அதில் உயரதிகாரி களின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது முதல் பல் வேறு பணிகளை செய்ய வேண்டி யிருக்கிறது என குறிப்பிட்டார்.

ஆனால் அந்த வீடியோ பதிவு திடீரென சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதும் மேத்யூ மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். ராணுவம் சார்பிலும் இந்த ரகசிய பேட்டி குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தர விடப்பட்டிருந்தது.

இந்நிலையில், தியோலாலி கன்டோன்மென்டில், ஒதுக்குப்புற மாக இருந்த ஒரு அறையின் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் ராய் மேத்யூவின் உடலை போலீஸார் நேற்று முன் தினம் கண்டெடுத்தனர். அவர் உயிரிழந்து 3 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

இந்த வீடியோ கடந்த மாதம் 25-ம் தேதி வெளியானது. அப்போது முதல் மேத்யூ மாயமாகி இருந்தார். மேலும் அவரது குடும்பத்தினரிட மும் கடைசியாக அன்று தான் பேசியுள்ளார். இந்த பேட்டி மூலம் தனது வேலை பறிபோக வாய்ப்பு இருப்பதாகவும், கடுமையான பின் விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்றும் அப்போது குடும்பத்தினரிடம் அவர் அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.

அதன்பின், குடும்பத்தினரையும் அவர் தொடர்பு கொள்ளவில்லை. இந்நிலையில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருப்பது ராணுவ அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்குப் பின், ராணுவத்திடம் மேத்யூவின் உடல் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.