Breaking News
எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும்: போராட வருமாறு வழக்கறிஞர்களுக்கு மார்க்கண்டேய கட்ஜூ அழைப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 4 கோரிக்கைகளை முன்வைத்து போராட வருமாறு தென் மாநில வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: –

தென் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து பார் அசோசியேசன், வழக்கறிஞர்கள் சங்கம், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியவற்றை சேர்ந்த வழக்கறிஞர்கள் நாளை முதல், அதாவது திங்கள்கிழமை முதல் தினந்தோறும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும், வழக்கறிஞர்களுக்கு தென் மாநில மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், 4 கோரிக்கைகளுக்காக போராட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள அவர் அந்த கோரிக்கைகளை பட்டியலிட்டுள்ளார்.

1) அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளை வழக்காடு மொழியாக்க வேண்டும்,
2) தென்னிந்தியாவில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும்,
3) தமிழக முதல்வர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும்; நேர்மையான அதிகாரியும், நிர்வாகத் திறமை வாய்ந்தவருமான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்.நடராஜை தமிழக முதல்வராக்க வேண்டும்.

4) விஞ்ஞானிகளின் கருத்தை கேட்டு முடிவெடுக்கும் வரை ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இந்த 4 கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாளை முதல் கையில் வெள்ளை பேண்ட் அணிந்து வழக்கறிஞர்கள் போராட வேண்டும். இவ்வாறு மார்க்கண்டேய கட்ஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.