Breaking News
புதிய குடியேற்ற மசோதா: ‛ஈராக்’கிற்கு மட்டும் விலக்கு அளித்து உத்தரவு

அமெரிக்காவுக்குள் நுழைய முஸ்லீம் நாட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையிலிருந்து, ஈராக் நாட்டுக்கு மட்டும் விலக்களித்து, அதற்கான மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.

7 நாடுகளுக்கு தடை:

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற, டொனால்டு டிரம்ப், பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்; சிரியா, ஈராக், ஈரான், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய, நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவிற்குள் நுழைய 3 மாதங்களுக்கு தடை விதித்தார்; இதற்கு, அமெரிக்கா மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டிரம்ப் உத்தரவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளிலும், டிரம்பின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தன.

‛ஈராக்’ கிற்கு விலக்கு:

இந்நிலையில், ஈராக் நாட்டுக்கு விலக்கு அளித்து புதிய குடியேற்ற மசோதாவில் அதிபர் டிரம்ப் கையெழுத்த்திட்டுள்ளார். ஏனைய முஸ்லீம் நாடுகளுக்கான தடையானது மார்ச் 16ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.