Breaking News
9ம் வகுப்பு படித்த இளைஞரை கரம் பிடித்த மருத்துவ மாணவி.. பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

பெங்களூருவில் ரகசிய திருமணம் செய்து கொண்ட தஞ்சை காதலர்கள், தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை மகளிர் போலீசில் தஞ்சமடைந்துள்ளனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் பார்த்திபன் (24). 9ம் வகுப்பு வரை படித்துள்ளார். புதுக்கோட்டையை சேர்ந்த புவனேஸ்வரி. இவர் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கோகுல் என்ற மகனும், பூஜா (20) என்ற மகளும் உள்ளனர். பூஜா சீனாவில் டாக்டருக்கு படித்து வருகிறார்.

பூஜாவின் அண்ணன் கோகுலுக்கு பார்த்திபன் நண்பர் என்று கூறப்படுகிறது. இதனால் பார்த்திபன் அடிக்கடி கோகுல் வீட்டிற்கு செல்வது வழக்கம். அப்போது, பூஜாவுக்கும், பார்த்திபனுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களின் காதலுக்கு இருவீட்டாரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே சீனாவில் இருந்தபடியே செல்போன் மூலம் பார்திபனை தொடர்பு கொண்டுள்ளார் பூஜா. இதனால் அவர்களுக்கு இடையேயான காதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்துள்ள பூஜாவுக்கும் பார்த்திபனுக்கும் பெங்களூரில் வைத்து ரகசிய திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து சனிக்கிழமை இரவு இருவரும் சென்னை வந்தனர். இதையடுத்து பாதுகாப்பு கேட்டு ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் பார்த்திபனும், பூஜாவும் தஞ்சம் அடைந்தனர். பாதுகாப்பு கேட்டு கோரிக்கை மனுவும் அளித்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.