Breaking News
சட்டமன்றத்தில் மார்ச் 16-ல் நிதி அமைச்சர் ஜெயக்குமார் தமிழக பட்ஜெட் தாக்கல்…

மார்ச் 16-ம் தேதி தமிழக பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2017 – 18-ம் ஆண்டிற்கான பட்ஜெட் அன்றைய தினம் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிதிஅமைச்சர் டி.ஜெயக்குமார் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெறும். அரசு துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று அதற்கான நிதி ஒதுக்கப்படும்.

மார்ச் 16-ம் தேதி காலை 10.30 மணிக்கு பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்குகிறது.எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்ற பின்னர் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.