Breaking News
காஷ்மீரில் கடும் துப்பாக்கிச்சண்டை : பயங்கரவாதி சுட்டுக் கொலை

காஷ்மீரின் குல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரும், பாதுகாப்பு படையினரும் இணைந்து இன்று (மார்ச் 09) அதிகாலை முதல் வீடு வீடாக சோதனை நடத்தி வந்தனர். அப்போது வீடு ஒன்றில் பதுங்கி இருந்த 4 முதல் 5 பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி சுட ஆரம்பித்தனர். பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் வீட்டை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். கடந்த 4 நாட்களில் நடக்கும் 2வது மிகப் பெரிய என்கவுன்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.