Breaking News
OPS அணியின் புதிய ஆட்சிமன்றக் குழு அறிவிப்பு : தலைவராக மதுசூதனன் நியமனம்

ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக புதிய ஆட்சிமன்றக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக மதுசூதனன் நியமிக்கப்பட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம், பொன்னையன், செம்மலை, மைத்ரேயன் உள்ளிட்ட 13 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி, ஆர்.கே நகரில் போட்டியிட உள்ள வேட்பாளரை புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆட்சிமன்றக் குழு கூடி தேர்வு செய்யும் என அறிவித்தார். மேலும் பேசிய அவர் வெகுஜன விரோதியான தினகரை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.