Breaking News
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ளது. அதன் காரணமாக மாலையில் மேகங்கள் உருவாகி மழை பெய்யும். இதை கோடை மழை என்று அழைக்கிறோம். தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையோ, காற்றின் மேலடுக்கில் ஏற்படும் சுழற்சியோ எதுவும் உருவாகவில்லை. கோடையையொட்டி அடுத்து 5 நாட்களுக்கு தமிழகத்தில் உள்மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.