Breaking News
ராணுவத்தினருக்கு குண்டு துளைக்காத சட்டை தயாரிக்க முடிவு

ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்காக, குண்டு துளைக்காத, குறைந்த எடையுள்ள சட்டைகளை, நம் நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குண்டு துளைக்காத சட்டை:

நம் நாட்டில், ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவத்தினர் பயன்படுத்தும் குண்டு துளைக்காத சட்டையின் எடை, மிக அதிகமாக உள்ளது. இதை அணிந்து கொண்டு, பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டையில் ஈடுபடும் போது, ராணுவ வீரர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். அதனால், எடை குறைந்த, இலகு ரக குண்டு துளைக்காத சட்டைகளை, நம் நாட்டிலேயே தயாரிக்க, மத்திய அரசின், ‘நிடி ஆயோக்’ அமைப்பு ஆலோசித்து வருகிறது.

ஆலோசனை:

ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில், சர்வதேச அளவில் நம் நாடு தான், முன்னணியில் உள்ளது. குறிப்பாக, குண்டு துளைக்காத சட்டைகள், அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உ.பி., மாநிலம் கான்பூரில் உள்ள நிறுவனம் தான், இந்த வகை சட்டைகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிறுவனத்துடன், இலகு ரக குண்டு துளைக்காத சட்டைகள் தயாரிப்பது பற்றி, நிடி ஆயோக் ஆலோசித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.