Breaking News
சரவணன்-மீனாட்சி புகழ் செந்தில், ஸ்ரீஜா பிரிந்துவிட்டார்களாமே!

சரவணன் மீனாட்சி தொடர் புகழ் செந்தில், ஸ்ரீஜா இடையே பிரச்சனை ஏற்பட்டு அவர்கள் பிரிந்துவிட்டார்களாம். சரவணன் மீனாட்சி தொலைக்காட்சி தொடரில் ஜோடியாக நடித்து பிரபலம் ஆனவர்கள் செந்தில் மற்றும் ஸ்ரீஜா. கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அப்போது அந்த திருமணம் பற்றி தான் பலரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

மாப்பிள்ளை
தனது மனைவியை கேரளா ஏஞ்சல் என்று கொஞ்சிக் கொண்டிருந்தார் செந்தில். தற்போது இருவரும் சேர்ந்து மாப்பிள்ளை தொடரில் நடித்து வருகிறார்கள்.

காதல்
சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தபோது அல்ல மாறாக திருமணத்திற்கு பிறகே காதலிக்க ஆரம்பித்தோம் என்றார்கள். இந்நிலையில் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம்.

பிரிவு
பிரச்சனை முற்றி செந்திலும், ஸ்ரீஜாவும் பிரிந்து வாழ்கிறார்களாம். இந்த தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று திருமணம் செய்ததாக செந்தில், ஸ்ரீஜா முன்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செந்தில்
செந்தில் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்று அவர் ஸ்ரீஜாவை மணந்தபோது தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ஸ்ரீஜாவையும் அவர் பிரிந்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.