Breaking News
கை, காலை கட்டி தினமும் தாக்கினர்: பாகிஸ்தான் ராணுவம் மீது இந்திய வீரர் பரபரப்பு புகார்

சர்ஜிக்கல் ஸ்டிரைகின் போது பாகிஸ்தானிடம் மாட்டிக்கொண்ட இந்திய ராணுவ வீரர் பாபுலால் சவான், தான் எவ்வாறு பாகிஸ்தான் ராணுவத்தினரால் கொடுமை படுத்தப்பட்டதை விளக்கியுள்ளார். செப்டம்பர் 29-ம் தேதி இந்திய ராணுவத்தின் சிறப்பு கமாண்டோ படை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதல் நடத்தி 38 தீவிரவாதிகளை கொன்றது. சுமார் 2 கி.மீ வரை எல்லைக் கோட்டைத் தாண்டி இந்த படை ஊடுருவிச் சென்று, அங்கிருந்த தீவிரவாத முகாம்களை அழித்தனர். அப்போது 22 வயது இந்திய ராணுவ வீரர் சந்து பாபுலால் சவான் பாகிஸ்தானிடம் மாட்டிக்கொண்டார்.

செப்டம்பர் 29ம் தேதி பிடிப்பட்ட சவான், நான்கு மாதங்களுக்கு பிறகு ஜனவரி 21-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். எல்லை தாண்டி சென்ற என்னை பிடித்ததும், உடைகளை எடுத்து சோதனை செய்தனர். பின் கயிறுகளால் கட்டி வைத்து கொடுமை செய்தனர். இரவா பகலா என்பது கூட தெரியாமல் இருந்த நிலையில் செத்துவிட வேண்டும் என்று தோன்றியதாக அவர் கூறினார். பாகிஸ்தானில் என்னை கடுமையாக தாக்கினர். கொடுமை செய்தவர்களிடம் என்னை கொல்ல சொன்னேன். ஆனால் எனக்கு ஏதோ ஊசி போட்டு, தொடர்ந்து தாக்கினர் என்று அவர் கூறினார். இந்த சம்பவம் ராணுவ வட்டாரங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.