Breaking News
கோவையில் அண்ணனை மிதித்து கொன்ற கொடூர தங்கை

கோவை மாவட்டம் செல்வபுரம் கல்லாமேடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ்(32) கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இவரது தந்தை இறந்து விட்டதால், தாய் வேலை சென்று குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாதபோது செல்வராஜுக்கும் அவரது தங்கை நாகலட்சுமிக்கும்(23) இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் நாகலட்சுமியை செல்வராஜ் கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரம் அடைந்த நாகலட்சுமி செல்வராஜின் மார்பு பகுதியில் மிதித்துள்ளார்.

இதில் செல்வராஜ் வலியால் துடித்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அண்ணனை கொன்றுவிட்டு தப்பி ஓடிய நாகலட்சுமியை காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.